Wednesday, December 21, 2005

மீரட் கலகம் ...

இது 1857 சிப்பாய் கலகம் அல்ல. 2005ல் அத்துமீறிய சில காவலர்களால் வந்த கலகம். உத்திரபிரதேச மாநிலம் மீரத்திலுள்ள காந்தி பார்க்கில் அத்துமீறுபவர்களையும், ஈவ்-டீசிங்கில் ஈடுபவர்களையும் குறிவைத்து அம்மாநில காவல்துறை திங்களன்று நடத்திய "ஆபரேசன் மஜ்னு"வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கே (வழக்கமாய்) கூடியிருந்த இளைஞர்-இளைஞிகளை அடித்து , துன்புறுத்திய காட்சிகளை பத்திரிக்கைகளும், தொலைக்காட்சியினரும் வெளியிட்டதும், காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான ஒரு காதல் ஜோடி இன்னும் வீட்டிற்கு திரும்பாததும் காவல்துறையினருக்கு வலுவான எதிர்ப்பு கிளம்ப காரணமாயிற்று. (கலாச்சார காவலர்களாய் தங்களை காட்டிக்கொள்ள பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சியினருக்கும் தங்களின் திட்டம் குறித்து தகவல் சொல்லியதே காவல்துறைதான் என்பது சுவராசியமான தகவல் !!!!) .மக்களவையிலும் ஒலித்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை பெண் ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமை கமிஷனும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தபோவதாக அறிவித்துள்ளது .....

சிறிது காலம் முன்பு ஹோண்டா தொழிற்சாலையிலும் , சென்னையில் ஒரு ஹோட்டலிலும் அத்துமீறி கடும் கண்டனத்துக்கு உண்டான காவல்துறை மனித உரிமை குறித்து விழித்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது

2 Comments:

At 10:49 AM, Blogger மு மாலிக் said...

நம்புவோமாக..

 
At 8:35 PM, Blogger Unknown said...

I have expressed my views in my post
http://chennaicutchery.blogspot.com/2005/12/blog-post_113518010652886309.html

 

Post a Comment

<< Home