Tuesday, November 22, 2005

கங்குலி ஜோக்ஸ் -- தொடர்கிறது ...

இந்த பதிவு சென்னையில் இன்று கிரிக்கெட் போட்டியை காண ஆர்வமாயிருந்து ஏமாந்த என்னை போன்ற ரசிகர்களுக்கு ஆறுதலாக....

அதற்கு முன் என் பதிவுகளில் தொடர்ச்சியாக கங்குலி குறித்த கிண்டல்களை பதிவு செய்வதால், ஒரு சிறிய தன்னிலை விளக்கமாக, நான் என் பழைய பதிவொன்றில் கணேஷின் கருத்தொன்றுக்கு தெரிவித்த கருத்தை இங்கே பதிகிறேன்.

நானும் கங்குலி ரசிகனில்லைதான். ஆனால் எனக்கும் அவர் மிகச்சிறந்த Batsman என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் இடம் இந்திய அணியில் இன்னும் காலியாக உள்ளது என்பதும் உண்மையே...

(பி.கு): ஆனாலும் சச்சினின் ஆட்டத்தை தீவிரமாக ரசிப்பவன் என்ற முறையில ஏனோ இந்த மாதிரி துணுக்குகளை மிகவும் ரசிக்கிறேன்.


சரி இனி...

( பங்கேற்பாளர்கள் : தல கங்குலி, கங்குலியின் அடிப்பொடிகள், கிரேக் சேப்பல். இந்திய தேர்வுக்குழு உறுப்பினர்கள், திருவாளர் பொதுஜனம்..)

கங்குலியின் அ.பொ: தல தல டெஸ்ட் மேட்சிலும் நீங்க கேப்டன் இல்லனு அந்த சேப்பல் சொல்லவச்சுட்டார்.

கங்குலி : எனக்கு ரிவிட்டு அடிக்கிறதே சேப்பலுக்கு வேலையா போச்சு. இன்னிக்கு போர்டு மீட்டிங்குல இந்த கங்குலியா ...சேப்பலானு முடிவு செய்யறேன்டா........எடுடா அந்த பேட்ட, மாட்டுடா அந்த ஹெல்மட்ட...

(கங்குலியும் அவர் குழுவும் கோபமாய் செல்வதை பார்த்து...)

திருவாளர் பொதுஜனம் : அய்யோ கங்குலி பேட்ட எடுத்துட்டு கெளம்பிட்டாரே... இன்னிக்கு எத்தன சிக்ஸ் அடிக்க போறாரோ.. தெரியலேயே ....

(தேர்வுக்குழுவுக்கான அறைக்கு சென்றவுடன் கங்குலி பேட்டை குறுக்காய் வைக்கிறார்)

கங்குலி : இந்த பேட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன். பேச்சு பேச்சா இருக்கனும். எனக்கு டெஸ்ட் மேட்சிலே கல்தா கொடுத்தவன் எவண்டா??

சேப்பல்: என்ன கொஞ்சம் சத்தமா....இங்க வந்து சொல்லேன்...

கங்குலி : நான் அங்க வரமாட்டேன். என் அ.பொ விடம் சொல்லிவிடறேன்.

கங்குலியின் அ.பொ: சரி தல......., எவண்டா எங்க தலைய ஒரம் கட்டினது???

கங்குலி : ஏய் கிரெக். நீ மட்டும் ஒரு நல்ல கிரிக்கெட்டரா இருந்தா எனக்கு நல்ல பவுன்சர் போடு பார்க்கலாம்.

( சேப்பல் உடனே 200 கி.மீ வேகத்தில் பவுன்சர் வீச கங்குலின் பேட் துண்டாகி ரெண்டாகிறது )

கங்குலி : ஒத்துக்கிறேன். நீ ஒரு நல்ல கிரிக்கெட்டரனு ஒத்துக்கிறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

( சாப்பலும், தேர்வுக்குழு உறுப்பினர்களும் கங்குலியை சுற்றிவளைக்கிறார்கள் )

கங்குலி : உங்களாலாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு. நான் இதுவரைக்கும் எந்த மேட்சிலும் டக் அடிச்சதில்லை

தேர்வுக்குழு உறுப்பினர்கள்: போன சீரியஸ்லதானே எல்லா மேட்சிலும் டக் அடிச்சே

கங்குலி : அது போன சீரியஸ். நான் சொல்றது இந்த சீரியஸ்ல. நான் இப்ப நெட் பிராக்டிஸ் போறேன், ஆனா டீமுக்கு திரும்பி ...

சேப்பல்: திரும்பி ...

கங்குலி : வர மாட்டெனு சொல்ல வந்தேன்.

சேப்பல்: இதப்பாரு ..இனிமேல் நடக்கப்போற எந்த மேட்சிலும் உன்ன சேத்துக்க போறதில்ல

கங்குலி : வேணாம்.

சேப்பல்: பங்காளதேஷ் டீம்னா கூட உனக்கு இடம் கிடையாது

கங்குலி : வலிக்குது

தேர்வுக்குழு உறுப்பினர்கள்: ரஞ்சி கோப்பைனா கூட நீ 13வது ஆள்தான்.

கங்குலி : அழுதுடுவேன்

சேப்பல்: ஏன் தெருவில ஆடுற கிரிக்கெட்ல கூட நீ சூப்பர் சப்ஸ்டுட்டுக்கு எடுபிடிதான்.

கங்குலி : அழுதுடுவேன் ... அழுதுடுவேன்

( கங்குலி சோகத்துடன் தன் உடைந்த பேட்டுடன் கொல்கத்தா திரும்புகிறார்)

திருவாளர் பொதுஜனம் : அடேங்கப்பா... கங்குலியோட பேட்டே உடைஞ்சு போச்சுனா பவுலிங் போட்டவன் இன்னும் டீமுல இருப்பாங்கிறே??

கங்குலி: இன்னுமடா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டுயிருக்கு...

கங்குலி அ.பொ: அது அவங்க தலைவிதி தல.....

1 Comments:

At 12:44 PM, Blogger kirukan said...

nice comdey Ulta from winner

 

Post a Comment

<< Home