Thursday, December 29, 2005

தமிழ் வலைத்திரட்டிகள் ...

தமிழில் வலைப்பதிவுகள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் வலைத்திரட்டிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. வலைப்பதிவுகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழ்நிலையில் நல்ல வலைப்பதிவுகளை அடையாளங்காணவு்ம், ஆரோக்கியமான வலைப்பதிவுகள் பார்வையாளரை சென்றடையவும் நல்ல வலைத்திரட்டிகள் அவசியமாகிறது. போட்டிக்காக வலைத்திரட்டிகள் துவங்கப்படாமல் ஒரு வலைத்திரட்டியின் செயல்பாடுகளிலிருந்து பெற்ற அனுபவங்களின் மூலம் மற்றொரு வலைத்திரட்டி இன்னும் கூடுதல் சௌகர்யத்தோடு பிறந்தால் வலைப்பதிவுலகிற்கு நல்லது.

சரி சமீப காலமாக உலா வரும் சில வலைத்திரட்டிகள் குறித்த தகவல்...

1. தேன்கூடு

850 வலைப்பதிவுகள் வரை திரட்டப்பட்டுள்ள இந்த திரட்டியில் பதிவுகளை வகைப்படுத்தும் வாய்ப்பும், அன்று வெளியான பதிவுகளின் விபரம் முதல் பக்கத்திலேயே வெளியாவதும், பிடித்தமான வலைப்பதிவுகளை சேமிக்கும் வாய்ப்பும் நல்ல முயற்சி.

2. நந்தவனம்

தமிழ்மணத்திலிருந்து (அல்லது தமிழ்மணத்திற்கு பதிலாக) வெளிவரவிருக்கும் இந்த வலைத்திரட்டி தமிழ்மணத்தின் தற்போதைய வடிவத்தை விட நன்றாக இருந்தாலும் இன்னும் சிறப்பாக செய்யலாமென தோன்றுகிறது. வகைப்படுத்தப்படும் முறை, வாசகர் நல்ல பதிவுகளை பரிந்துரைக்கும் தற்போது முறையில் தோன்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு போன்றவையும் வந்தால் நன்றாகயிருக்கும்.

மேலும் கொஞ்ச நாளுக்கு முன் அறிவிப்பு வந்த முத்தமிழ்மன்றத்தின் வலைத்திரட்டி என்னானதென்று தெரியவில்லை...

பார்க்கலாம். வலைப்பதிவு திரட்டிகளிடம் நிலவும் இந்த ஆரோக்கியமான போட்டியினால் நமக்கு நல்ல பதிவுகளை அடையாளம் காணும் வாய்ப்பு கிட்டினால் யோகம்தான்..

சமீபத்தில் ரசித்த வலைத்தளம் இது. சென்னையை பற்றிய செய்திகளுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத்தளம் சென்னை பற்றிய நிறைய விவரங்களுடன் பல நல்ல புதினங்களையும் புகழ்பெற்ற நூல்களையும் இணையத்திலேயே கொண்டுள்ளது. நல்ல முயற்சியாக தோன்றுகிறது ,. ...

6 Comments:

At 2:27 PM, Blogger Boston Bala said...

Nandavanam... sneak prevue :-) வித்தியாசமாக இருக்கிறது

 
At 7:59 PM, Anonymous Anonymous said...

நல்ல முயற்சிகள். பாராட்டுவோம்.

தேன்கூடு நன்றாக இருக்கிறது. இன்னும்கூட அழகு படுத்தலாம்.

நந்தவனம் என்பது தமிழ்கோமணம் இணைப்புகளைக் கொண்டே இயங்குகிறது. முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன.

இன்னொன்று என்னாயிற்று என்று தெரியவில்லை.

 
At 4:38 PM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At 11:33 AM, Blogger Mani G Sankar said...

Anna,
Blog nalla panrenga.
Sirantha pathivugal list'l ramya's is extraordinary. I am mani A.k's frnd. Moreover I started one blog in eng pagesback.blogspot.com .
After running successfully, I will enter in tamil soon.
Then yours met (A..Ah) is to enjoy.

ThanQ.

 
At 6:34 PM, Blogger Unknown said...

விக்னேஷ்,
உங்கள் பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் இருந்தாலும் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லி வருகிறேன்..

தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும்

பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

 
At 10:46 AM, Blogger neighbour said...

nalla thokupu...

very informative தண்டோரா

 

Post a Comment

<< Home