அறிவிப்பு
நண்பர்களே,
ஏற்கனவே இங்கு அறிவித்தபடி நான் என் புதிய வலைத்தளத்திற்கு மாறியுள்ளேன். இனி என்னுடைய பதிவுகள் அனைத்தையும் புதிய தளத்திலேயே பதியவிருப்பதால் புதிய தளத்திற்கு வர வேண்டுகிறேன்.
அன்புடன்,
விக்னேஷ்
http://vicky.in/dhandora
Pls. visit there ... -- Vignesh
நண்பர்களே,
இஸ்லாமியர்கள் மிக புனிதராக மதிக்கக்கூடிய நபிகளை கேலிச்சித்திரமாக வரைந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், பரபரப்புக்கு பேர் போன பிரபல இந்திய ஒவியர் ஹுசைன் இந்திய அன்னையை நிர்வாணமாய் வரைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்துக்களின் புனிதமாய் கருதும் ராமாயணத்தை ஓவியத்தொடராய் வரையும்போது ராமர், சீதை , அனுமன் ஆகியோரை நிர்வாணமாய் வரைந்து பெரும் பரபரப்புக்குள்ளாகி, பின்னர் பலத்த எதிர்ப்பிற்கு பின் மன்னிப்பு கேட்டும் இருக்கிறார். இப்போது மீண்டும் ஒரு நிர்வாண ஒவியத்தின் மூலம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்.
தமிழில் வலைப்பதிவுகள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் வலைத்திரட்டிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. வலைப்பதிவுகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழ்நிலையில் நல்ல வலைப்பதிவுகளை அடையாளங்காணவு்ம், ஆரோக்கியமான வலைப்பதிவுகள் பார்வையாளரை சென்றடையவும் நல்ல வலைத்திரட்டிகள் அவசியமாகிறது. போட்டிக்காக வலைத்திரட்டிகள் துவங்கப்படாமல் ஒரு வலைத்திரட்டியின் செயல்பாடுகளிலிருந்து பெற்ற அனுபவங்களின் மூலம் மற்றொரு வலைத்திரட்டி இன்னும் கூடுதல் சௌகர்யத்தோடு பிறந்தால் வலைப்பதிவுலகிற்கு நல்லது.
இப்போதெல்லாம் நான் பொதுவாய் வீடு திரும்பும் நேரங்களில் மெகா தொடர்களும், TV பார்க்கும் எண்ணத்தையே போக்கிவிடும் நேரடி தொலைபேசி நிகழ்ச்சிகளும் அதிகமாய் ஆக்கிரமித்திருப்பதால் ( வழியேயின்றி ???) செய்தி சேனல்கள் தான் ஒரே புகலிடமாய் இருக்கிறது.
2005ஐ பொறுத்தளவில் இந்தியாவுக்கு சோதனையான காலகட்டங்களை விட சாதனையான காலகட்டங்களே அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. அரசியலில் தொடங்கி ஆராய்ச்சி, பொருளாதாரம், அயல்நாட்டுடனான உறவு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சாதனையை எட்டியிருக்கிறோம். வளர்ந்த நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியில் கண் கொண்டிருப்பதும், உலகளாவிய முடிவுகளில் இந்தியாவின் குரல் எடுபட தொடங்கியிருப்பதும் சமீப காலங்களாகவே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகு நிகழ்வுகள் 2005ல் அதிகமாக நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியே.
இந்திய திரையுலகில் இரண்டாம் இன்னிங்ஸில் எவ்வளவு திறமை வாய்ந்த நபரையாயிருந்தாலும் தாக்கு பிடித்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பு. ஆனால் முதல் இன்னிங்ஸைப்போலவே இரண்டாம் இன்னிங்ஸிலும் வெற்றிக்கொடி நாட்டியது அமிதாப் மட்டுமே. (மாபெரும் கலைஞனான சிவாஜியை கூட நாம் வீணடித்துவிட்டது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மையே!!). இந்தியாவின் மிகவும் பிஸியான மனிதர்களுள் ஒருவரான அமிதாப் உடல்நலம் குன்றிய போது தேசமே படபடத்தது இதற்கு சான்று. அவருடைய மகன் அபிஷேக்குடன் கூட ஜோடி சேர தயங்கும் நடிகைகள் இவருடன் நடிக்க துடிப்பதும், பொதுவாக விளம்பர உலகில் கொடிகட்டி பறக்கும் விளையாட்டு வீரர்களை விட அதிகமாய் விளம்பர உலகை இவர் ஆக்கிரமித்திருப்பதும், கௌன் பனேகா குரோர்பதி என தொலைக்காட்சி உலகையும் ஆக்கிரமித்திருப்பதும் அமிதாப் மீண்டும் சாதனையாளராய் மின்னத்தொடங்கியிருப்பதற்கு சான்று ....
வீராங்கனைஇதயத்துடிப்பையெல்லாம் பறித்துக்கொண்டு ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி சாதித்திருப்பது இந்தியாவில் டென்னிஸுக்கு புத்துயிர் அளித்திருக்கிறது. இந்த வருட தொடக்கதில் டென்னிஸ் தரவரிசையில் 169 வது இடத்திலிருந்த இவர் வருட இறுதியில் 35வது இடத்திற்குள் வந்திருப்பது மிகப்பெரிய சாதனையே. ஹைதராபாத் ஓபனில் பட்டம், ஆஸ்திரிலேய ஓபனில் மூன்றாம் சுற்றுவரை சென்ற ஒரே இந்திய வீரங்கனை என்ற பெருமை, யு.எஸ் ஒபனில் நான்காவது சுற்றுவரை சென்றது, ஒற்றையர் பிரிவில் முதல் 50வது தரவரிசைக்குள் வந்த முதல் இந்தியரேன சாதனை வருடத்தில் சாதனைகளை அள்ளிக்கொண்டார். உடை குறித்த சர்ச்சை, கற்பு குறித்து தெரிவித்தாக கூறப்பட்ட செய்திகளால் எழுந்த பரபரப்புகள் ஆகியவை குறித்து அதிக கவலை கொள்ளாமல் ஆட்டத்தில் கவனமாயிருக்கும் இவர் 2006ல் முதல் பத்து இடங்களுக்குள் வந்தால் டென்னிஸ் இந்தியாவில் இன்னும் கூடுதல் கவனத்தைப்பெறும்
இந்தியாவைப் பொறுத்தளவில் தேர்தல் திருவிழாவில் எல்லா விதமான வேடிக்கைகளும் நடக்கும். பதவியைத்தக்க வைக்க , இழந்த பதவியை மீண்டும் அடைய கிடைக்கும் இந்த வாய்ப்பில் நடக்கும் அனைத்து கூத்துகளையும் இத்வரை வேடிக்கை பார்க்கும் அதிகாரமற்ற ஒரு பொம்மை அமைப்பாகவே இருந்துவந்த தேர்தல் ஆணையம் சமீபகாலமாக விசுவரூபமெடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. சமீபத்தில் முடிந்த பீகார் தேர்தல், தமிழகம் ,உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிராவில் நடந்த இடைத்தேர்தல் என அரசியல்வாதிகள் மிகத்தீவிரமாயிருக்கும் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் மிகத்தீவிரமாயிருந்து மக்களும் ஊடகங்களும், சிற்சில நல்ல அரசியல்வாதிகளும் பாரட்டும் வகையில் நடந்துகொண்டு சாதனை கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு 2006ல் இன்னும் அதிகமாய் வேலையிருப்பது நிச்சயம் ...
மாறியிருக்கிறது. இந்தியாவில் மூதலிடு லாபகரமாய் தோன்றத் தொடங்கியிருக்கிறது. இந்திய தொழிற் நிறுவனங்கள் மென்பொருள்துறை மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் உலகளாவிய சந்தையிலுள்ள நிறுவங்களோடு போட்டிக்கு தயாராகி வருகின்றன. பங்குச்சந்தை அபார வளர்ச்சி பெற்று வருகின்றது. வருட துவக்கத்தில் 7000 புள்ளிக்கும் குறைவாயிருந்த சென்செக்ஸ், கடந்த பதினைந்து மாதங்களில் 2700 புள்ளிகள் வளர்ச்சியுற்று 9400 என்ற ரீதியில் வந்து நிற்கிறது. திறமான அரசியல், வளர்ந்து வரும் சமூகம், காலத்தின் கட்டாயம் என பல்வேறு காரணங்களிருப்பினும் தொழிற்துறையை பொறுத்தளவில் 2005 பொன்னான ஆண்டாகவே இருந்திருக்கிறது ....
2005 பொறுத்தளவில் இந்தியாவில் ஊடகங்களுக்கிடையில் மிகப்பெரிய போட்டி உருவாகியிருக்கிறது. செய்திகளை வழங்குவதில் தொடங்கி, பார்வையாளனை தன் வசப்படுத்த மேற்கொள்ளும் உத்திகள் வரை போட்டி உச்சகட்டத்திலிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ, அதுவும் ஆளுங்கட்சிக்கெதிரான செய்தியென்றால் அது பற்றிய தகவலே தெரியாத காலம் போய் 24 மணி நேரமும் விழித்திருந்து செய்தி தர ஏராளமான நிறுவனங்கள் உருவாகிவிட்டன. ரங்கம் வெள்ளத்தில் தொடங்கி, பாகிஸ்தான் பூகம்ப நிலவரம் வரை, டில்லி காவல்துறை ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய காட்சியிலிருந்து பாரளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கிய காட்சி வரை வேறு பட்ட கோணத்தில் உங்கள் வீட்டறையிலே காண்பிக்க நிறுவனங்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. சமீபகாலமாய் பரபரப்பாக பேசப்படும் எனப்படும் வலைத்தளங்களோ பெரிய பெரிய நிறுவனங்களுக்கு பெருத்த சாவல்விடும் நிலையில் விசுவரூபமிட்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாளர்களான வானொலியும் செய்திதாள்களும் வளர்ந்து வரும் அறிவியல் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு களத்தில் தொடர்ந்து நீடிக்கின்றன.ஆனால் செய்தி நிறுவனங்களுக்கிடையே தன்னை களத்தில் நிலைப்படுத்த ந்டக்கும் இந்த இடைவிடாத யுத்தத்தால் சில நேரம் தவறான செய்திகள் மக்களை சென்றடையும் அபாயமிருந்தாலும் பலநேரத்தில் பயனுள்ள யுத்தமாகவே இருப்பது ஆரோக்கியமான செய்திதான்...இது 1857 சிப்பாய் கலகம் அல்ல. 2005ல் அத்துமீறிய சில காவலர்களால் வந்த கலகம். உத்திரபிரதேச மாநிலம் மீரத்திலுள்ள காந்தி பார்க்கில் அத்துமீறுபவர்களையும், ஈவ்-டீசிங்கில் ஈடுபவர்களையும் குறிவைத்து அம்மாநில காவல்துறை திங்களன்று நடத்திய "ஆபரேசன் மஜ்னு"வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கே (வழக்கமாய்) கூடியிருந்த இளைஞர்-இளைஞிகளை அடித்து , துன்புறுத்திய காட்சிகளை பத்திரிக்கைகளும், தொலைக்காட்சியினரும் வெளியிட்டதும், காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான ஒரு காதல் ஜோடி இன்னும் வீட்டிற்கு திரும்பாததும் காவல்துறையினருக்கு வலுவான எதிர்ப்பு கிளம்ப காரணமாயிற்று. (கலாச்சார காவலர்களாய் தங்களை காட்டிக்கொள்ள பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சியினருக்கும் தங்களின் திட்டம் குறித்து தகவல் சொல்லியதே காவல்துறைதான் என்பது சுவராசியமான தகவல் !!!!) .மக்களவையிலும் ஒலித்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை பெண் ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமை கமிஷனும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தபோவதாக அறிவித்துள்ளது .....
1. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்த செய்தி
ரஜினியின் அடுத்த படமான சிவாஜியின் படபிடிப்பு இன்று துவங்கியதையொட்டி வெளியான புகைப்படமிது. நின்றாலும் நடந்தாலும் செய்தியாயிருக்கிற ரஜினியின் அடுத்த படம் அதுவும் ஷங்கர், ஏ,ஆர். ரகுமான், ஏ.வி.எம் என்ற பிரம்மாண்டமான கூட்டணியுடன் என்பதால் இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவு, சுஜாதா வசனம் (எஸ்டோரஜன், டெஸ்டோஸ்டிரான் என்றெல்லாம் தலைவர் பேச ..உம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்) , பீட்டர் கெய்ன் சண்டை பயிற்சி, குறிப்பாய் மீண்டும் வைரமுத்து என பட்டையை கிளப்பபோவது நிஜம். இனி குமுதம், விகடன், குங்குமம் எல்லாம் "சிவாஜி- வெளிவராத தகவல்கள், சிவாஜி- இந்தபடத்தின் உல்டாவா, ரஜினியுடன் நடித்தது நான் செய்த பாக்கியம்- சிவாஜியில் நடித்த (தலைவரின் அறிமுக பாடலில் ஐந்தாவது வரிசையில் தலைகாட்டிய) வளரும் நடிகை ஆனந்த கண்ணீருடன் பேட்டி" என வாராவாரம் சர்க்குலஷேனை அதிகரிக்கலாம். ஆனால் தீபாவளி வெளியீடு என்கிறார்கள். நிச்சயம் அவ்வளவு நாளெல்லாம் தாங்காது தலைவா !!!"இங்கே மட்டும்தான் ஒருத்தன் தன் கடமையை செய்யறத்துக்கு லஞ்சம் கொடுக்கணும்" - இந்தியன் திரைப்படத்தில் வந்த பொதுமக்கள் அதிகமாக கைதட்டிய வசனமிது. இந்தக்கூற்றை இன்னொருமுறை மெய்ப்பித்திருக்கிறார்கள் மேன்மையான இந்திய பாரளுமன்ற உறுப்பினர்கள்