Monday, September 19, 2005

அன்பே ஆருயிரே --- ஒரு பார்வை

சந்தேகத்தின் காரணமாக பிரியும் காதலர்களை அவர்களின் நினைவே சேர்த்து வைப்பதுதான் கதை.

உண்மையிலேயே தமிழில் வித்தியாசமான கதைக்கரு. ஆனால் இந்த சந்தேகத்திற்க்கான காரணத்தில் வரையறை மீறல்,அந்த காதலர்களின் பிரிவில் வரையறை மீறல், அவர்கள் காதலர்கள் என்பதிலேயே வரையறை மீறல், பின்னர் சேர்வதிலும் வரையறை மீறல் என படம் நெடுகிலும் வரையறை மீறல்கள் ...

"இந்த அசிங்கம் ...என்ன பிடிக்கும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று கதை நாயகன் மூலம் S.J. சூர்யா சொல்லும் தன்னிலை விளக்கம், தெரிந்தே படத்துக்கு சென்று விட்டு பின்னர் விமர்சனம் செய்யும் என்னை போன்றவர்களை சாடுவதால் இத்தகைய விமர்சனத்திற்கு இத்துடன் ஒரு .

சிவாவும் நிலாவும் காதலர்கள். பத்திரிக்கையாளனான சிவா தன் காதலியுடன் சுக வாழ்வு வாழ அதிகப்படியாக உழைக்க, நிலா தன் காதலன் தன்னோடு அதிக நேரம் செலவழிக்கவும், அவனது கஷ்டத்தை குறைக்கவும் தன் தோழியின் அண்ணனோடு உணவகம் துவங்க, சிவாவின் சக ஊழியன் ஒருவனின் மனைவி உணவகம் துவங்கிய நண்பனோடு ஒடிப்போனதை அறிந்த சிவா நிலாவிடம் வேண்டாமென மறுக்க, பின்னர் நிலாவை சமாதனப்படுத்த அரைமனதோடு சம்மதிக்க , ஆயினும் அதற்கடுத்து நிகழும் சம்பவங்கள் அனைத்தும் சிவாவின் சந்தேகத்தை அதிகப்படுத்த, சந்தேகம் முற்றி சண்டையாகி காதலர்கள் பிரிய இடைவேளை...

அவர்களின் நினைவுகள் நீல நிற உடையில் உருவமெடுத்து, இருவரின் உணர்ச்சிகளையும் கிளறி அவர்கள் இருவரும் இணைவதுதான் மறு பாதி...



இந்த வித்தியாசமான கதை திரைக்கதை ஆக்கப்பட்ட விதத்தை விமர்சித்தால் நான் முன்னரே சொன்னதுப்போல சூர்யாவின் படம் இப்டி இப்டி தான் இருக்கும் என்று தெரிந்தே சென்றுவிட்டு அப்டி அப்டி இருக்கு, எப்டி எப்டி வரைமுறை மீறிவிட்டது என்று விமர்சிப்பது முறையல்ல என்பதால் திரைக்கதை பற்றியும் படமாக்கப்பட்ட விதம் குறித்தும் No comments.

சூர்யா, M.G.R யும் ரஜினியையும் கலந்து கட்ட முயற்சித்திருக்கிறார்... உடலமைப்பும், குரலும் கவுத்தியதால் ஆங்காங்கே காமெடி ஆகிவிட்டது சோகம்

நிலாவும் சிம்ரனாக முயற்சித்திருக்கிறார், இடையமைப்பும், முகபாவமும் கவுத்தியதால்....

சந்தானம் ஆங்காங்கே கலகலப்பூட்டியிருந்தாலும் நகைச்சுவையில் தனித்து நிற்க, நிறைய கவனமும், உழைப்பும், வித்தியாசமான முயற்சியும் தேவை...

இசைப்புயல் மீண்டும் வீசியிருக்கிறது. ஆனால் பாடல்கள் படமெடுக்கும் விதத்தில் ஒருவகையான amateurism தெரிவதால் "மயிலிறகே" கூட வருடவில்லை ....

கனல்கண்ணன் "பன்ச்"சிட்டுரிக்கிறார். ரத்னகுமார் எதிர்பார்த்த படியே சென்சார் அதிகாரிகளுக்கு நிறையவே வேலை வைத்திருக்கிறார். ரஜினியின் வாரிசு கிராபிக்சில் புது முயற்சி எடுத்திருந்தாலும் முன்னரே சொன்னதுபோல ஒருவகையான amateurism தெரிவதால் ஒட்டவில்லை

மொத்தத்தில் ஒவ்வொரு முறையும் தன் திரைக்கதையை நம்பி ஒற்றை வரி கதையை கொண்டு படமெடுக்கும் சூர்யா இந்த முறை திரைக்கதையிலேயே சொதப்பி இருப்பதால்... அன்பேஆருயிரே ஆச்சரியப்படுத்தவில்லை !!!!

Friday, September 16, 2005

ரிச்சர்டு மதுரம் - சில நினைவுகள்

காலையிலே ஒரு சோகமான சேதி....

ரிச்சர்டு மதுரத்தின் மரணம் ....



நிழலும் நிஜமும்

ரிச்சர்டு மதுரம் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்..ஆம் !! காமராஜராக நம் நெஞ்சில் பதிந்தவர்தான் .....

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் எவ்வாறு சிவாஜியின் நினைவு வருகிறதோ அவ்வாறே இந்த தலைமுறைக்கு காமராஜ் என்றால், நிச்சயமாக மதுரத்தின் நினைவு வரும். அந்த அளவுக்கு நடை, உடை, பாவனைகளில் ஒன்றியிருந்தார்.

சிறு வயதில் அப்பா சொல்ல கேட்டு, ஒருமுறை திருநெல்வெலி கலெக்டர் ஒருவர் ஆளுங்கட்சி பிரமுகருக்கே திரையரங்கு உரிமம் கொடுக்க மறுத்ததை கேள்விபட்ட முதல்வராக இருந்த காமராஜர், கலெக்டர் இல்லம் தேடி வந்து பாரட்டினார், என்பதை கற்பனையில் கொண்ட எனக்கு, எப்பாடு பட்டாவது மதிய உணவு திட்டம் கொண்டுவருவேன் என்றும், தேவைப்பட்டால் நானே ஊர் ஊராக பிச்சையெடுத்தாவது நிதி சேர்க்கிறேன் என்று காட்டிய தீவிரத்தையும் நிஜத்தில் கண் முன்னெ கொண்டு வந்த மதுரத்தின் புகழ் காலத்திற்க்கும் நிலைக்கும் என்பது திண்ணம்.

அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும் நல் உள்ளங்களுடன் என் உள்ளமும் சேர்க்கை.....

Thursday, September 08, 2005

வரவு எட்டணா..... செலவு ?????

பெட்ரோல் டிசல் விலையேற்றம் ....

இனி தினமும் தங்க விலை நிலவரத்தை வெளியிடுவது போல நமது நாளேடுகள் பெட்ரோல் விலையை வெளியிடலாம் போல ...

எனது நினைவாற்றாலில் பிழை இல்லாமல் இருந்தால் ...கடந்த இரண்டாண்டுகளில், இவற்றின் விலை கிட்டத்தட்ட 50 % சதவிகிதத்திற்கு மேலே ஏறிவிட்டது...

(இது குறித்து எனது கருத்துக்களை விரிவாக என் ஆங்கில வலைப்பதிவில் பதிவு செய்து இருக்கிறேன்)

வழக்கம்போல ஆளுங்கட்சியினர் சல்ஜாப்புடன் சாமளிக்க எதிர்க்கட்சியினர் வாய்ப்பை தவறாது பயன்படுத்த தொடர்கிறது ஏமாற்று வேலை...

பிகார் மற்றும் சில மாநில சட்டப்பேரவை தேர்தல் புண்ணியத்தால் LPGயும் மண்ணெண்னையும் தப்பியது

தேவை வருடத்திற்க்கு ஒரு முறை தேர்தல் ..

எனக்கு தேர்தலுக்காக நம் அரசியல்வியாதிகள் அடிக்கும் கூத்தை விவரிக்க நான் முயற்சி செய்த கவிதை(???) ஒன்று நினைவுக்கு வருகிறது ..

பளிச் பளிச்சென சாலைகள்
தினமும் மூன்று முறை குடிநீர்
தடையில்லா மின்சாரம்
பஞ்சரேயாகாத பஸ்
எல்லாம் மறைந்த எங்களுர் M.L.Aவின் புண்ணியம்

தொகுதியில் இடைத்தேர்தல் .....